Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிர்மலா தேவி விவகாரம்: தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க 4 தனிப்படைகள்

நிர்மலா தேவி விவகாரம்: தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க 4 தனிப்படைகள்
, ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (18:54 IST)
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்ட கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட இருவரும் திடீரென தலைமறைவானதால் போலீசாரின் சந்தேகம் உறுதியானதாக கூறப்பகிகிறது.
 
webdunia
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தலைமறைவாகவுள்ள இருவரும் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் தலைமறைவில் இல்லை: இருக்கும் இடத்தை தெரிவித்த எஸ்.வி.சேகர்