Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊமத்தை இலை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது...?

ஊமத்தை இலை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது...?
, சனி, 19 மார்ச் 2022 (12:17 IST)
ஊமத்தை இலையை நல்லெண்ணெய்யில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.


ஊமத்தை இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காய் ச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச்சீதளத்தால் வந்த காது வலி தீரும்.

ஊமத்தை இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும்இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.

ஊமத்தை இலைச்சாற்றைச் சம அளவு தேங்காய் எண்ணெய்யில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம் சதைவளரும் புண்புரைகள், தீரும்.

ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும், புழு இறந்து முடி வளரும்.

ஊமத்தை இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துளசி இலையின் அற்புத மருத்துவ குணங்களும் பயன்களும் !!