Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா வேலிப்பருத்தி !!

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா வேலிப்பருத்தி !!
, திங்கள், 21 மார்ச் 2022 (15:17 IST)
வேலி ஓரங்களில்  கொடி போல் படர்வதால் இதை வேலிப்பருத்தி என்று அழைக்கின்றனர்.  இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும்.  இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.


வேலிப்பருத்தியின் வேர், கொடி, இலை, பால் இவைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஜலதோஷத்தினால் உண்டாகும் வாத, பித்த மாறுபாடுகள், தோஷ விடங்கள் நீங்கும்.

வேலிப்பருத்தி பித்ததத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது.  உத்தாமணி இலையைச் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி பின் ஆறவைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால் சுவாசகாச நோய்கள் நீங்கும். உத்தாமணி இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும்.

உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து  ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால்  வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.

பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு உத்தாமணி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.

சித்த மருத்துவத்திலும், வர்ம மருத்துவத்திலும் தயாரிக்கப்படும் மூலிகை தைலங்களில் முக்கியமாக காயத்திரிமேனி தைலத்தில் வேலிப் பருத்திச்சாறு  முக்கிய பங்கு வகிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்வைத்திறனை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் குங்குமப்பூ !!