Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ந்து கிரீன் டீ குடிப்பது நல்லதா....?

தொடர்ந்து கிரீன் டீ குடிப்பது நல்லதா....?
ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும். கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளது. தொடர்ந்து கிரீன் டீ அருந்தும்போது, இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. மூச்சு சம்மந்தமான   பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன.
 
நரம்பு சம்பந்தமான நோய்களை தடுப்பதுடன், இதயம் சம்மந்தமான் நோய்கள் வராமலும் இது பாதுக்காக்கிறது. கிரீன் டீயை வெறும் வயிற்றில் எப்போது அருந்தவே கூடாது. ஏனென்றால், அது வயிற்றுக்கு தேவையில்லாத சங்கடங்களை கொடுக்கும்.
 
உணவு சாப்பிட்டவுடன் கிரீன் டீ குடித்தால் அது நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் ஊட்டசத்துகளை நம் உடலில் சரியாக சேர விடாது மற்றும் சாப்பிட்ட உணவு   செரிமானம் ஆவதிலும் பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் எப்போதும் உணவு சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து கிரீன் டீ குடிக்கலாம்.
 
கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகிவருவதால், பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும். உடல் எடையைக் குறைப்பதில் கிரீன்  டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
 
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும். கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டும் தன்மை படைத்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டிலேயே சாம்பார் பொடி செய்வது எப்படி...!