Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஞ்சள் பூசணி ஜூஸை குடித்து வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள் !!

Yellow pumpkin
, திங்கள், 3 அக்டோபர் 2022 (13:23 IST)
மஞ்சள் பூசணிகாயை சமைத்து சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள பெக்டின் என்னும் வேதிபொருள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.


மஞ்சள் பூசணி ஜூஸ் செய்து அல்லது சமைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

மஞ்சள் பூசணிகாய் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட மஞ்சள் பூசணிகாய் உதவுகிறது. மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் பூசணிக்காய் ஜூஸை தினமும் மூன்று வேளை அரை டம்ளர் அளவு தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் இப்பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் மஞ்சள் பூசணி ஜூஸ் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் மஞ்சள் பூசணியில் உள்ள மலமிளக்கும் பண்புகள் மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவும்.

மஞ்சள் பூசணியில் வைட்டமின் சி மற்றும் இதர கனிமச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. எனவே தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பூசணி ஜூஸை குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை தாக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து, உடலைப் பாதுகாக்கும்.

தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பூசணி ஜூஸை குடித்து வந்தால் உடலின் வெப்பநிலையை சீராக வைத்து கொள்ளும். எனவே கோடைக்காலங்களில் உடல் சூடு அதிகரிக்காமல் இருக்க பூசணி ஜூஸ் குடிக்கலாம்.

செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் சிறிதளவு பூசணி ஜூஸைக் குடித்து வாந்தால், செரிமானம் சிறப்பாக நடைபெறுவதோடு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

Edited by Sasikala
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறதா மஞ்சள் !!