Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்போன் கொடுத்து வெற்றி பெற நினைக்கும் காங்கிரஸ்?

செல்போன் கொடுத்து வெற்றி பெற நினைக்கும் காங்கிரஸ்?
, வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (14:52 IST)
கர்நாடக சட்டசபை தேர்தல் அறிக்கையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியாக காங்கிரஸும், எதிர்கட்சியாக பாஜகவும், மூன்றாவது பெரிய கட்சியாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் உள்ளது. கருத்து கணிப்பின் படி, கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையக்கூடும் என செய்திகள் வெளியாகின்றன.
 
தேர்தலில் வெற்றி பெற கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரஸும், பாஜகவும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
webdunia
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மங்களூருவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் காவிரி நீரை பாதுகாத்தல், வேலைவாய்ப்புத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு இலவச செல்போன் போன்றவை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த தேர்தல் அறிக்கை காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவுக்கு எதிரான கூட்டணி: காங்கிரஸ் தலைமையிலா? மம்தா விளக்கம்...