Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொத்து குவிப்பு வழக்கு.! வளர்மதியின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

valarmathi

Senthil Velan

, செவ்வாய், 30 ஜனவரி 2024 (15:46 IST)
முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி மேல்முறையீடு செய்திருந்தார். 
 
முடித்து வைக்கப்பட்ட வழக்கை 10 ஆண்டுகளுக்கு பின் தாமாக முன்வந்து விசாரிப்பது ஏற்புடையதல்ல என வளர்மதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்று வளர்மதி தரப்பில் வாதிடப்பட்டது
 
இதேபோன்ற வேறொரு வழக்கில் ஐகோர்ட் உத்தரவை அறிக்கையாக அளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை பிப்ரவரி ஆறாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜி ஜாமின் மனு: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!