Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவுக்கு ரூ.700 கோடியா? நாங்கள் சொல்லவே இல்லை: ஐக்கிய அரபு அமீரகம்

கேரளாவுக்கு ரூ.700 கோடியா? நாங்கள் சொல்லவே இல்லை:  ஐக்கிய அரபு அமீரகம்
, வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (16:19 IST)
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகம், ரூ.700 கோடி வழங்குவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

 
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர்.
 
கேரள மாநிலத்துக்கு வெள்ள் நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலம் முழுவதும் பல நாடுகளில் இருந்து வந்தது. மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து ஐக்கிய அர்பு அமீரகம் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.700 கோடி அறிவித்தது என்ற செய்தி வெளியானது. 
 
இதையடுத்து மத்திய அரசை பலரும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் மத்திய அரசு வெளிநாடுகளின் உதவியை மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது.
 
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம், வெள்ள நிவாரண நிதி ரூ.700 கோடி வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா கூறுயதாவது:-
 
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மறு சீரமைப்பு பணிக்கு தேவையான உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான குறிப்பிட்ட அளவு நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனது விடாமுயற்சியால் காவல்துறை அதிகாரியான திருநங்கை நஸ்ரியா