Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை –பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை –பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
, புதன், 24 அக்டோபர் 2018 (12:42 IST)
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை காஷ்மீர் போலிசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரின் சூது கொதைர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் அந்த வீட்டை நள்ளிரவு 2 மணிக்கு சுற்றி வளைத்தனர்.

போலிஸார் சுற்றி வளைத்ததை அறிந்த தீவிரவாதிகள் வீட்டுக்குள் இருந்த படியே துப்பாக்கியால் சுட்டனர். போலிஸாரும் அவர்கள் மேல் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த இரண்டு தீவிரவாதிகளும் போலிஸாரால் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் டிஜிபி வி கே பிர்தி ’முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக ஸ்ரீநகர் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அங்கு இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடியோ வெளியிட்டது மாஃபியா அல்ல மாமியா - தங்க தமிழ்ச்செல்வன்