Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமான விபத்தில் உயிர் தப்பினார் தெலுங்கானா முதல்வர்

விமான விபத்தில் உயிர் தப்பினார் தெலுங்கானா முதல்வர்
, செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (14:36 IST)
ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உயிர் தப்பினார்.
 
தெலூங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ், கரிம் நகரில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அடுத்த நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் செல்லும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
ஹெலிகாப்டரில் சரக்குகள் வைக்கும்  பகுதியில் இருந்த எலக்டரானிக் சாதனம் ஒன்று வெடித்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பேசப்படுகிறது. இதை சரியான நேரத்தில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி பார்த்தால் பெரும் விபத்து தவிர்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே 2009-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஒன்றாக இருந்தபோது, ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிரியாவில் சகோதரியின் உயிரை காப்பாற்ற தன் உயிரைக் கொடுத்த தங்கை