Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாட்டிறைச்சி உத்தரவுக்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி

மாட்டிறைச்சி உத்தரவுக்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி
, செவ்வாய், 11 ஜூலை 2017 (15:59 IST)
மாட்டிறைச்சி குறித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவிற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து பரபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது.


 

 
கடந்த மே மாதம், நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. மேலும், கால்நடைகள் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, சந்தைகளில் மட்டுமே விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனை செய்ய வேண்டும். அதுவும் விவசாய தேவைக்கு மட்டுமே. இதை மாடு விற்பவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
 
இது தொடர்பாக பல வழக்குகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவிற்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. அப்போது, இன்னும் 3 மூன்று மாத காலத்திற்கு மாட்டிறைச்சி குறித்து எந்த புதிய கட்டுப்பாடுகளையும் அமுல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. 
 
இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடையேயும் மத்திய அரசு ஆலோசனை கேட்டு வருவதாகவும், வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் அதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல்காந்தியின் செயல் இவரை அதிர வைத்ததாம்: அந்த இவர் யார் தெரியுமா?