Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சபரிமலை விவகாரம்: வெட்டி பந்தாவில் ஈடுபட்ட ரெஹானா பணி இடமாற்றம்

சபரிமலை விவகாரம்: வெட்டி பந்தாவில் ஈடுபட்ட ரெஹானா பணி இடமாற்றம்
, புதன், 24 அக்டோபர் 2018 (13:24 IST)
வெட்டி விளம்பரத்திற்காக சபரிமலைக்குள் நுழைய முயன்ற ரெஹானா பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்களை தடுத்து நிறுத்தியும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
கடந்த 19 ஆம் தேதி வெட்டி பந்தாவிற்காகவும், வீண் விளம்பரத்திற்காகவும் எந்த விரதமும் மேற்கொள்ளாமல் பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்ற பெண் கோவிலுக்குள் நுழைய முற்பட்டார். கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் உட்பட சில பெண்கள் திரும்ப அனுப்பப்பட்டார்.
 
இதையடுத்து அவரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. அவருக்கும் கேரள ஜமாஅத்துக்கும் இனி எந்தவொரு தொடர்பும் கிடையாது என தெரிவித்தது.
 
இந்நிலையில் கொச்சியில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ரெஹானா பாலாரிவட்டோம் பகுதிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலமுறை கண்டித்தோம் ; அவர் திருந்தவில்லை : ஜெயக்குமார் தம்பி பகீர் பேட்டி