Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தமா? ரயில் சேவை முடங்க வாய்ப்பு..!

south railway
, ஞாயிறு, 5 நவம்பர் 2023 (08:16 IST)
இந்தியாவில் உள்ள 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் நாடு முழுவதும் ரயில்வே சேவை முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்  இதனை வலியுறுத்தி நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வேலை நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்வதற்காக நவம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் போராட்டம் நடத்துவது உறுதி செய்யப்பட்டால்  ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் உள்ள 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தால் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 1974 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த ரயில்வே ஊழியர்கள் 20 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதற்குள் ரயில்வே ஊழியர்களிடம் ரயில்வே துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழையால் ஊட்டி மலை ரயில் ரத்து.. மீண்டும் எப்போது தொடங்கும்?