Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புல்வாமா தாக்குதல் தினம் அனுசரிப்பு..! உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம்.!! பிரதமர் மோடி

Modi

Senthil Velan

, புதன், 14 பிப்ரவரி 2024 (16:04 IST)
புல்வாமா தாக்குதலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதையும் அஞ்சலியும் செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்ற போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
 
இந்த தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது.
 
இந்நிலையில் புல்வாமா தாக்குதலின் நினைவு தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


நமது தேசத்துக்காக அவர்கள் ஆற்றிய சேவையும் தியாகமும் என்றும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Paytm Payments Bank நிறுவனத்தின் மீது புதிய வழக்கு