Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4வது நாளாக தொடரும் புதுச்சேரி அரசுப்பேருந்து ஊழியர்கள் போராட்டம்

4வது நாளாக தொடரும் புதுச்சேரி அரசுப்பேருந்து ஊழியர்கள் போராட்டம்
, செவ்வாய், 21 நவம்பர் 2017 (07:40 IST)
புதுச்சேரி அரசு பேருந்து ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பேருந்துகள் இல்லாததால் ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.





இந்த நிலையில் அரசு பேருந்து ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்றும் வரை பேருந்துகளை இயக்க போவதில்லை என்றும், எத்தனை நாட்கள் ஆனாலும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும்ஒப்பந்த ஊழியர்கள் உறுதியுடன் கூறி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர புதுச்சேரி அரசு தீவிர முயற்சி எடுத்து ஒப்பந்த ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஆய்வு செய்வது ஏன்? கவர்னர் பன்வாரிலால் புரோகித் விளக்கம்