Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவின் சிஏஏ சட்டத்தால் எங்கள் நாட்டின் இந்துக்களுக்கு நிம்மதி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்..!

இந்தியாவின் சிஏஏ சட்டத்தால் எங்கள் நாட்டின் இந்துக்களுக்கு நிம்மதி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்..!

Siva

, செவ்வாய், 12 மார்ச் 2024 (15:19 IST)
இந்தியாவில் சிஏஏ சட்டம் அமலுக்கு வந்துள்ளதால் எங்கள் நாட்டில் உள்ள இந்துக்களுக்கு நிம்மதி என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவித்த நிலையில் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடந்த 2000 முதல் 2010 வரை விளையாடிய தனிஷ் கனேரியா என்பவர் தனது எக்ஸ் தளத்தில், சிஏஏ சட்டத்தால் பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் இனி நிம்மதியாக மூச்சு விடலாம் என்று பதிவு செய்துள்ளார் 
 
இந்த பதிவுக்கு பாகிஸ்தான் வீரர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணிக்காக பத்தாண்டு விளையாடிய தனிஷ் அதன் பிறகு அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடை செய்யப்பட்டார் என்பதும் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்துவாக பிறந்தேன் இந்துவாகவே இறப்பேன் என்றும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனிஷி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹரியாணா புதிய முதல்வர் யார்? இன்று மாலை பதவியேற்பு..!