Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன்
, வெள்ளி, 23 மார்ச் 2018 (14:41 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் திர்ப்பளித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ கடந்த மாதம் அதிரடியாக கைது செய்தது. கைது செய்யப்பட்ட கார்த்திக் சிதம்பரத்தை சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வந்தது.
 
இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நாளை முடிவடையும் நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்திற்கு இன்று நிபந்தனை ஜாமீன் அளித்து தீர்ப்பளித்துள்ளது. கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் பிணைத் தொகையாக 10 லட்சம் ரூபாய் செலுத்தவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்