Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தைகள் பவுடர் விற்பனையை நிறுத்துகிறது ஜான்சன் அண்ட் ஜான்சன்!

johnson
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (21:50 IST)
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்த பல ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் மக்கள் மத்தியில் பிரபலமானது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்தப் பவுடரில் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சட்ட போராட்டங்களை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சந்தித்து வருகிறது 
 
இந்த நிலையில் டால்கம் அடிப்படையிலான குழந்தைகள் பவுடர் விற்பனையை 2023 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்துவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது. எங்களுடைய குழந்தைகளுக்கான அனைத்து டால்கம் பவுடரை இனிமேல் சோளமாவு பவுடராக மாற்றப் போவதாகவுஅந்த பவுடர் வகை மிகவும் பாதுகாப்பானது என்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அ.ம.மு.க. பொதுக்குழு தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: டி.டி.வி. தினகரன்