Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV-F14 ராக்கெட்.. விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து..!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV-F14 ராக்கெட்.. விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து..!

Mahendran

, சனி, 17 பிப்ரவரி 2024 (18:41 IST)
வானிலை மாற்றத்தைத் துல்லியமாகக் கண்டறியும் INSAT-3DS என்ற அதிநவீன செயற்கைக் கோளை GSLV-F14 ராக்கெட் மூலமாக விண்ணில் வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
இஸ்ரோ வடிவமைத்துள்ள GSLV-F14 என்ற ராக்கெட் பிப்ரவரி 17ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருபப்தாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் கவுண்ட்-டவுன் சமீபத்தில்  தொடங்கியது.
 
இஸ்ரோ என்ற இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அமைத்துள்ள அடுத்த ராக்கெட் GSLV-F14. வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்டறியும் நவீன தொழில்நுட்பத்தில் உருவான 'இன்சாட் - 3டிஎஸ்' என்ற செயற்கைக்கோள் இந்த ராக்கெட்டில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த நிலையில் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா? ஆய்வு செய்ய இபிஎஸ் கோரிக்கை