Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாரும் வாங்க முன்வரவில்லை; ஏர் இந்தியாவை அரசே நடத்த முடிவு!

யாரும் வாங்க முன்வரவில்லை; ஏர் இந்தியாவை அரசே நடத்த முடிவு!
, புதன், 30 மே 2018 (21:49 IST)
ஏர் இந்தியா நிறுவன பங்குகளை யாரும் வாங்க முன் வராத காரணத்தினால் மத்திய அரசே தொடர்ந்து நடத்தும் என்று விமான போக்குவரத்து துறை செயலர் தெரிவித்துள்ளார்.

 
மத்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் கடன் தொகை மேலும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதை ஒட்டி மத்திய அமைச்சரவைக் குழு ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது.
 
ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்க விலைப்புள்ளி கோரி விண்ணப்பம் அளிக்க அரசு விளம்பரம் செய்தது. கடைசி தேதி மே31ஆம் தேதி நீடிக்கப்பட்டது. இதுவரை எந்த நிறுவனமும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கவில்லை. 
 
இந்நிலை விமான போக்குவரத்து துறை செயலர், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை யாரும் வாங்க முன் வரவில்லை எனில் அரசே தொடர்ந்து நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியைகள் கைத்தறி சேலை உடுத்த வேண்டும்; ஒடிசா அரசு அதிரடி