Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பரிதாப பலி

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பரிதாப பலி
, வெள்ளி, 1 ஜூன் 2018 (12:27 IST)
இமாச்சரப்பிரதேசத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப்பிரதேச மாநிலம் தியோங் பகுதியில் அரசுப்பேருந்து ஒன்று 33 பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைபகுதியில் சென்று கொண்டிருந்தது. ஒரு வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 பெண்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத்துறையினர், பலியானவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 26 நபர்களை மீட்ட மீட்புத்துறையினர், அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீஸார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகாவில் காலா ரிலீஸ் ஆகுமா? - குமாரசாமி பதில்