Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பார்க்கிங் பிரச்சனையில் ஒருவருக்கு துப்பாக்கி சூடு

பார்க்கிங் பிரச்சனையில் ஒருவருக்கு துப்பாக்கி சூடு
, திங்கள், 1 ஜனவரி 2018 (11:37 IST)
டெல்லியில் உள்ள பாரில் வாகன பார்க்கிங் தொடர்பாக நடந்த தகராறில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள மதுபான பாரில்  இன்று அதிகாலை 3.30 மணிக்கு, புத்தாண்டு நிகழ்ச்சியில் குடித்து விட்டு வெளியே வந்த வினய், உமேஷ் ஆகிய இருவரும் வாகன நிறுத்தத்தில் இருந்த தங்களது வாகனத்தை எடுக்கும் போது இருவரது வாகனமும் மோதியது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு உண்டானது. வாய்ச்சண்டை முற்றியதால் உமேஷ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து  வினையை நோக்கி சுட்டுள்ளார். வினய் கழுத்தில் குண்டு பாய்ந்து கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் வினையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபான பார்களை நள்ளிரவு 1 மணியுடன் மூட வேண்டும் என்ற விதிமுறையை மீறி அதிகாலை 3.30 மணி வரை செயல்பட்ட பாரின் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப் பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முரசொலி இணையதளம் முடக்கம்