Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப.சிதம்பரத்திடம் 6 மணி நேரம் விசாரணை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள்

ப.சிதம்பரத்திடம் 6 மணி நேரம் விசாரணை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள்
, செவ்வாய், 5 ஜூன் 2018 (21:40 IST)
ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டு முதலீடு செய்வதற்கு அப்போதைய நிதியமைச்சர் சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு குறித்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்த நிலையில் அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், சிதம்பரத்தை ஜூன் 5-ம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய தடை விதித்தது. 
 
webdunia
இந்த நிலையில் ஜூன் 5-ம் தேதியான இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒத்திவைத்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று காலை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் காலையில் தொடங்கிய விசாரணை பிற்பகல் வரை நீண்டு அதன்பின்னர் உணவு இடைவேளைக்கு பின்னர் மீண்டும் விசாரணை தொடர்ந்தது. சுமார் 6 1/2 மணி நேரத்திற்கு பின்னர் சற்றுமுன்னர் ப.சிதம்பரம் விசாரணை முடிந்து வெளியே வந்தார். அவரிடம் அமலாக்கத்துறையினர் செய்த விசாரணை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'காலா'வுக்கு கர்நாடகா தடை: சீமான் கண்டனம்