Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதென்ன பறவையின் எச்சமா? மோடியை கலாய்த்த குத்து ரம்யா!

அதென்ன பறவையின் எச்சமா? மோடியை கலாய்த்த குத்து ரம்யா!
, வியாழன், 1 நவம்பர் 2018 (19:11 IST)
கர்நாடக மாநிலம் மண்டியா பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்பியும், நடிகையுமான ரம்யா, மோடியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதை கேலி செய்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத்தில் நேற்று மோடியால் திறந்து வைக்கப்பட்டது. 182 மீட்டர் உயரம் உள்ள இந்த சிலை உலகின் உயரமான சிலையாக உள்ளது.  
 
இந்த சிலைக்கு 'ஒற்றுமைக்கான சிலை' என பெயர் சூட்டப்பட்டு, ரூ.2,989 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸை ரம்யா, நேற்று திறக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு கீழ் நிற்கும் மோடியின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இது என்ன பறவை எச்சமா? என கேலி செய்துள்ளார். 
 
இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ள நிலையில் பாஜகவினர் இதர்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 9600 பேர் லைக் செய்துள்ளனர், 2,400 பேர் ரிட்விட் செய்துள்ளனர், 4500 பேர் கமெண்ட் செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்படி என்ன இருக்கு கொளத்தூர்ல? ஸ்டாலின் பதில்