Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 ஜி சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு!

5 g network

Sinoj

, சனி, 13 ஜனவரி 2024 (20:54 IST)
5 ஜி சேவையை பயன்படுத்த  1-10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இந்தியாவில், ஏர்டெல், ஜியோ, வோடபோன், பிஎஸ்என்எல் ஆகிய நெட்வொர்குகள் உள்ளன. இந்த  நெட்வொர்க்களுக்கு என பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளன.

4 ஜி நெட்வொர்க் பிரபலமாக இருந்த நிலையில், அதிவேக இணையதள சேவையைப் பெறும் நோக்கில்,  ஜி நெட்வொர்க் சேவை அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கென  5ஜி மொபைல் போன்களும் அறிமுகமாயின.

இந்த நிலையில், தற்போது பலரும்  5 ஜி சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், 1-10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

சோதனை அடிப்படையில், 4ஜி சேவை கட்டணத்தில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 2024ல் நடைமுறைக்கு வரலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுமக்கள் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்