Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 1,542 பாதிப்புகள்; 8 பேர் பலி! – இந்திய கொரோனா நிலவரம்!

ஒரே நாளில் 1,542 பாதிப்புகள்; 8 பேர் பலி! – இந்திய கொரோனா நிலவரம்!
, செவ்வாய், 18 அக்டோபர் 2022 (10:35 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்புகள் தொடர்ந்து 3,000-குள் இருந்து வருகிறது.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,542 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,32,430 ஆக குறைந்தது. புதிதாக 08 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,913 ஆக உயர்ந்தது.

நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,77,068 ஆக உயர்ந்துள்ளது.  நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 26,449 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 2,19,37,66,738 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 4,23,087 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By: Sugapriya Prakash

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் 59,000ஐ தாண்டியதால் மகிழ்ச்சி!