Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5-11 வயதினருக்கான தடுப்பூசி சோதனை வெற்றி: விரைவில் பயன்பாடு

5-11 வயதினருக்கான தடுப்பூசி சோதனை வெற்றி: விரைவில் பயன்பாடு
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (06:49 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஏற்கனவே 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.
 
இந்த தடுப்பூசியை தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் செலுத்தப்பட்டு வரும் நிலையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அவர்களுக்கு இந்தியாவில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிறன்றும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 5 வயது முதல் 15 வயது வரை காண ஃபைசர் தடுப்பூசி தடுப்பு ஊசி சோதனை வெற்றி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இதனை அடுத்து ஒப்புதலுக்கு பின்னர் விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் மூன்றாவது அலை இந்தியாவில் தோன்றுவதற்கு முன்னரே குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏ.கே.ராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?