Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாட்ஸ்அப்பில் வெளியான +2 கேள்வித்தாள்? அதிர்ச்சியில் சிபிஎஸ்இ

வாட்ஸ்அப்பில் வெளியான +2 கேள்வித்தாள்? அதிர்ச்சியில் சிபிஎஸ்இ
, வியாழன், 15 மார்ச் 2018 (13:05 IST)
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இன்றைய தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்அப்பில் வெளியானதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

 
நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் நடைபெற்று வருகிறது. 
 
இன்று நடைபெறும் கணக்குப்பதிவியல் பாடத்தின் கேள்வித்தாள் நேற்று மாலை வாட்ஸ்அப்பில் வெளியானதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாடத்தில் பொதுத்தேர்வு கேள்வித்தாள் நேற்று வாட்ஸ்அப்பில் வெளியானதாக புகார் எழுந்துள்ளது. கல்வி இயக்குநரகத்திடம் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
இதனால் கடினமாக உழைக்கும் மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் அருந்தும் குடிதண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிப்பு