Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய போலீஸ்

முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய போலீஸ்
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (10:56 IST)
பீகாரில் பாதுகாப்பு குறித்து முதல்வர் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள் சிலர் குறட்டை விட்டு தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பீகாரில் நடைபெற்று வரும் துர்கா பூஜைக்கு போதிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும் விவாதிக்க அம்மாநில முதலமைச்சர்  நிதிஷ்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமாக காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 
 
அப்போது காவல் துறை அதிகாரிகள் சிலர் முதல்வரின் ஆலோசனைக்கூட்டத்தை கவனிக்காமல் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த காட்சியானது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பணி நேரத்தில் தூங்கிய காவல் அதிகாரிகளுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காரில் ஏற சொன்னால் ஏறி விடுவீர்களா? - சுசி கணேசன் காட்டம்