Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று ஒரே நாளில் தமிழகம் வரும் அமித்ஷா-ராகுல் காந்தி: சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்..!

இன்று ஒரே நாளில் தமிழகம் வரும் அமித்ஷா-ராகுல் காந்தி: சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்..!

Siva

, வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (07:32 IST)
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். மாநில கட்சி தலைவர்கள் மட்டுமின்றி தேசிய கட்சி தலைவர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்தது.

அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் 2 நாள் பிரச்சார பயணம் செய்யவுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மதுரையில் பிரச்சாரம் செய்த பின்னர் நாளை குமரியில் ரோடு ஷோ மூலம் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து  அமித்ஷா பிரச்சாரம் செய்யவுள்ளார். அதையடுத்து திருவாரூரிலும் தென்காசியில் வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் செய்கிறார்

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து இன்று பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி. கோவையில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் இருவரும் இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர்.

ஒரே நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகிய இருவரும் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வர இருப்பதை அடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது என்பது தெரிய வருகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் கோடை மழை.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!