Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேஸ்புக் பதிவால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவி

பேஸ்புக் பதிவால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவி
, சனி, 24 மார்ச் 2018 (09:39 IST)
மத்தியபிரதேசத்தில் ஆசிரியர்களை தேசத் துரோகி என பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவியை கல்லூரியில் இருந்து ஓராண்டு நீக்குவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி அஸ்மா கான் போபாலில் உள்ள மோதிலால் விக்யான் மஹா வித்யாலயா என்ற கல்லூரியில் அறிவியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
 
இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினமான நேற்று மாணவி அஸ்மா, கல்லுாரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.
 
இதனையடுத்து கோபமடைந்த அஸ்மா கான், பகத் சிங் பற்றி நிகழ்ச்சி நடத்த தனக்கு அனுமதி அளிக்க மறுத்த ஆசிரியர்கள், தேச விரோதிகள் என பேஸ்புக்கில் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த செயலைக் கண்டித்து அஸ்மா கானை, கல்லுாரியில் இருந்து ஒரு ஆண்டு நீக்குவதாக நிர்வாகம் அறிவித்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு - ஐசியு வில் அனுமதி