Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாஸ்டலில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்: ஒடிசாவில் அதிர்ச்சி

ஹாஸ்டலில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பிரசவம்: ஒடிசாவில் அதிர்ச்சி
, திங்கள், 14 ஜனவரி 2019 (08:21 IST)
ஒடிசாவில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தாரிங்கிபடியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் மாணவிகள் சிலர் ஹாஸ்டலில் தங்கியும் படித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் துடித்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், சிறிது நேரத்தில் குழந்தை பிற்ந்துவிடும் எனவும் தெரிவித்தனர். அதேபோல் சிறுமிக்கு சற்று நேரத்தில் குழந்தையும் பிறந்தது.
 
இதனால் ஆடிப்போன சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் அந்த ஹாஸ்டலின் வார்டன், சமையல் மாஸ்டர் உள்பட பலரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது இடஒதுக்கீடு சட்டம் !