Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 மாத கர்ப்பிணி கற்பழிப்பு - 3 அயோக்கியர்களின் வெறிச்செயல்

6 மாத கர்ப்பிணி கற்பழிப்பு - 3 அயோக்கியர்களின் வெறிச்செயல்
, திங்கள், 28 மே 2018 (14:59 IST)
உத்திரபிரதேசத்தில் 6 மாத கர்ப்பிணிப் பெண்ணை ஆட்டோ டிரைவர் உள்பட 3 அயோக்கியர்கள் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் பெண்கள் பலர் ஆண்களால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
 
இந்நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 23 வயது கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் மருத்துவ பரிசோதனைக்கு சென்று பின் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
 
சிறிது தூரம் சென்ற பின், தன் மனைவியை ஆட்டோ பிடித்து வீடு செல்லுமாறு கணவர் கூறிவிட்டு சென்றுள்ளார்.
 
இதனையடுத்து ஆட்டோவிற்காக காத்திருந்த 6 மாத கர்ப்பிணிப் பெண்ணை ஆட்டோவில் வந்த 3 பேர் இழுத்து சென்றனர். பின்னர் அந்த 3 பேரும் கர்ப்பிணி பெண்ணை கற்பழித்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணும் அவரது கணவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் தப்பிச் சென்ற அந்த அயோக்கியன்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான எப்ஐஆர்!