Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

share

Siva

, புதன், 3 ஏப்ரல் 2024 (12:04 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பெரிய அளவில் பங்கு சந்தை ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் நிதானமாக வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று வெறும் 40 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 73 ஆயிரத்து 948 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி வெறும் 4 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 22457 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது
தேர்தல் வரை பங்கு சந்தை நிதானமாகவே இருக்கும் என்றும் பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு இருக்காது என்றும் எனவே புதிய முதலீடு செய்தவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கோல்ட் பீஸ், ஐடி பீஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பேங்க் பீஸ், சிப்லா, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சாதனை படைத்த சிறப்புக் குழந்தை! மகாபலிபுரம் முதல் சென்னை வரை நீந்திக் கடந்த நீச்சல் வீரன்!