Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச்சந்தை சென்செக்ஸ் திடீரென 500 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

பங்குச்சந்தை சென்செக்ஸ் திடீரென 500 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva

, புதன், 28 பிப்ரவரி 2024 (12:03 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சரிந்த பங்குச்சந்தை உயர்ந்த நிலையில்  இன்று சரிந்து உள்ளது என்பதும் இன்று ஒரே நாளில் 500 புள்ளிகள் வரை பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 498 புள்ளிகள் சரிந்து 72,596 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 163 புள்ளிகள் சரிந்து 22020 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஐடி பீஸ், கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கல்யாண் ஜூவல்லர்ஸ் ,மணப்புரம் கோல்டு உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதார் அட்டை முடக்கப்பட்டால் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? தேர்தல் ஆணையம் விளக்கம்..!