Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்பிள் நிறுவனத்தின் உயர்ரக பாகங்கள் தமிழ்நாட்டில் தயாராகிறது ...

ஆப்பிள் நிறுவனத்தின் உயர்ரக பாகங்கள் தமிழ்நாட்டில் தயாராகிறது ...
, வியாழன், 27 டிசம்பர் 2018 (19:34 IST)
இளம் யுவன் யுவதிகள் எல்லோரும் விரும்பும் ஒரு தொழில்நுட்ப சாதனம் ஆப்பிள். இதன்  தாக்கம் இன்றைய இளைஞர் எல்லோரிடமும் உண்டு. இந்நிறுவனம் ஒரு புது மாடல் போனை அறுமுகம் செய்யும் போது அதைப்பெற மக்கள் நடுஇரவு முதல் வரிசை கட்டி நிற்பதில் இருந்தே அதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
அத்தகைய சிறப்புகளைக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் உயர் ரக ஐபோன்கள் பாகங்களை ஒருங்கிணைக்கும் அசெம்பிள் பணிகளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான்  ஆலையில் நடைபெற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
 
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நம் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்ழ்கான் ஆலையானது சுமார் 2500 கோடி ரூபார்ய் முதலீட்டில் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐபோன், எஸ் இ மாடல் போன்கள் நம் பக்கத்து மாநிலமான பெங்கலூரில் உள்ள விஸ்ட்ரான் கார்ப் என்ற ஆலையில் தயார்செய்யப்பட்டு வருகிறது.
 
தற்போது ஸ்ரீபெரும்புதூரில் ஆப்பிள் நிறுவனத்தில் பாகங்கள் தயாராவதால் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருவயது குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை முயற்சி! காப்பாற்ற சென்ற ஆட்டோ டிரைவர் பலி