Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு!

டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு!
, திங்கள், 14 மே 2018 (19:33 IST)
பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு- பஞ்சாப் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிக்களைப் பெற்றுள்ள பஞ்சாப் அணி, இந்த ஆட்டத்தில் வென்றால் பிளேஆப் வாய்ப்பை தக்கவைத்து கொள்ளலாம் என்ற நிலையில் பெங்களூரு அணியை சந்திக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்திருந்த பெங்களூரு அணி, கடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை வீழத்தியதன் மூலம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் பெங்களூரு அணியோ ஏற்கனேவே பிளேஆப் வாய்ப்பை இழந்துவிட்டதால், இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.
webdunia
 
இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராயுடுவே வழிகாட்டி: பிளெமிங் புகழாரம்...