Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வயிறு நிரம்ப சாதம் சாப்பிடுவது நல்லதா? அளவாய் சாப்பிடுவது நல்லதா?

Rice
, திங்கள், 27 நவம்பர் 2023 (09:00 IST)
மூன்று வேளையும் சாதம் சாப்பிடுவதால் உடல் பருமன், தொப்பை போன்றவை ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகம் அரிசி சோறு சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது குறித்து அறிவோம்.


 
  • அதிகமாக அரிசி சோறு சாப்பிடுவது கல்லீரல் செயல்பாட்டை மோசமாக பாதிக்கும்
  • மதிய உணவுக்கு சாதம் இருப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் காலையிலும் இரவிலும் சோறு சாப்பிடக் கூடாது
  • காலையில் சத்தான உணவை உண்ணுங்கள். காலையில் காய்கறிகள் அதிகம் சாப்பிடுவது நல்லது.
  • இரவு நேரத்தில் உடல் எந்த ஒரு கடினமான செயலிலும் ஈடுபடாததால் அரிசி செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுக்கும்.
  • இரவில் கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம். அரிசியில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உள்ளது. மேலும் இந்த கார்போஹைட்ரேட் அதிகபடியான உடல் சோர்வையும், தூக்கத்தையும் ஏற்படுத்தும்.
  • இவ்வாறாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்குவதால் தொப்பை போடுவது, உடல் பருமன் அதிகரிப்பது போன்றவை ஏற்படுவதுடன், உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்புகளும் ஏற்படுகிறது.
  • மதியம் நேரத்தில் வயிறு முட்டும் அளவு சாப்பிடாமல் அளவாக சோறு சாப்பிடுவது நல்லது
  • எனவே தினமும் ஒரு வேளை மட்டும் அளவோடு சாதம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது
Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமகமக்கும் கொண்டைக் கடலை குழம்பு செய்வது எப்படி?