Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடையில் எண்ணெய் வழியும் முகத்திற்கு ஏற்ற துளசி பேஸ்பேக் எவ்வாறு தயாரிப்பது...

கோடையில் எண்ணெய் வழியும் முகத்திற்கு ஏற்ற துளசி பேஸ்பேக் எவ்வாறு தயாரிப்பது...
மருத்துவ குணம் நிறைந்த துளசியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் தயாரித்து, சரும பிரச்சனைகள் நீங்கலாம் என தெரிந்து கொள்வோம். விடுமுறை நாட்களில் போட்டு, கோடையிலிருந்து சருமத்தை காப்பதோடு, சரும அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

 
ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இறுதியில் ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள்.
 
சிறிது துளசி இலைகளை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் காணாமல் போய்விடும்.
 
சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 2 சிட்டிகை துளசி பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
துளசி இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலை உணவை தவிர்ப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?