Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைதியான மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன...?

அமைதியான மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன...?
மாரடைப்பின் மிக உன்னதமான அறிகுறிகளில் ஒன்று, கடுமையான மார்பு வலியையும், இடது கையில் வலியையும் அனுபவிக்கக்கூடும். ஆனால் இந்த சமிக்ஞைகளை வழங்கும் நரம்புகளுக்கு நரம்பு சேதம் ஏற்பட்டால் பிரச்சினைகள் எழும். 

இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாயில் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். கரோனரி ரத்தக்குழாயின் முழு அடைப்புதான் மாரடைப்புக்குக் காரணம்.
 
மாரடைப்பு இத்தகைய கடுமையான மார்பு வலியை ஏற்படுத்தும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். மார்பு வலியின் லேசான பதிப்புகள் பெரும்பாலும் காரணமாகின்றன. அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் - மாரடைப்பு அல்ல. ஆனால் அமைதியான மாரடைப்பில், தொடர்புடைய அறிகுறிகளைப் பற்றி அறியாமல் இவற்றை வேறுபடுத்துவது கடினம். 
 
மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.
 
சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு "அமைதியான மாரடைப்பு' என்று பெயர்.
 
இதய வலியின் வெவ்வேறு தன்மைகள் உண்டு. பொதுவாக இதய வலி நெஞ்சின் நடுப்பகுதியில் வரும். அது வலியாகவோ, ஒருவித அழுத்தமாகவோ, ஏதோ ஒரு கனமான பொருளை நெஞ்சில் சுமப்பது போன்ற உணர்வாகவோ, நெஞ்சின் இரு பகுதியில் இருந்தும் நடுப்பகுதியை நோக்கி கயிற்றால் இறுக்குவது போலவோ, நெஞ்சு முழுவதும் ஏதோ முழுமையாக நிறைவாக இருப்பது போன்ற உணர்வுடனோ இருக்கலாம்.
 
சில நேரங்களில் சாப்பாடு செரிக்காமல் உண்டாகும் அஜீரண கோளாறு போன்ற உணர்வாகவும் வெளிப்படலாம். நெஞ்சுக்குள் எரிச்சல் போன்ற உணர்வு இருக்கலாம். இத்தகைய உணர்வுகள் சில நிமிடங்கள் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ வரலாம். பொதுவாக இத்தகைய உணர்வுகள் தொடர்ச்சியாக 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தால் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 
மாரடைப்பு வரும் முன் சில நாட்களோ, வாரங்களோ, ஏன் சில மாதங்களுக்கு முன்பே கூட மேற்கூறிய அறிகுறிகள் தென்படலாம். அத்தகைய வலி ஏதாவது செயலில் ஈடுபட்டிருக்கும் போது சில நிமிடங்கள் வரும். ஓய்வு எடுத்தவுடன் மறைந்து விடும். இதற்கு "ஆஞ்சைனா' என்று பெயர்.
 
நாளடைவில் முன்பை விட குறைவான செயல்பாட்டிலேயே அத்தகைய வலி வந்தால் அல்லது ஓய்வுக்கு பின்னும் அவ்வலி உடனே மறையாமல் இருந்தால் அதுவே மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி. மேற்கூறிய வலி நெஞ்சின் நடுப்பாகத்தில் இல்லாமல் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க கைகளிலோ, நடுமுதுகிலோ, கழுத்திலோ, முகத்தாடையிலோ, வயிற்றிலோ கூட வரலாம். இத்தகைய வலியுடன் வாந்தியெடுப்பது போன்ற உணர்வு, வாந்தி எடுத்தல், தலைச் சுற்றல், அதிக வியர்வை போன்றவையும் மாரடைப்பின் அறிகுறிகளாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் சிறிதளவு உலர்திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் !!