Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

150 மில்லியனை குறி வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ!!

150 மில்லியனை குறி வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ!!
, வியாழன், 20 ஜூலை 2017 (14:02 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி பீச்சர் போன் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த போனின் விலை 500 முதல் 1000 ரூபாய் வரை இருக்கலாம் என தெரிகிறது.


 
 
இந்நிலையில், பீச்சர் போன் அறிமுகத்தின் மூலம் ஜியோ என்ன எதிர்ப்பார்க்கிறது என தெரியவந்துள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்றும் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 
CLSA அறிக்கையின் படி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன்கள் 150 மில்லியன் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் என தெரிகிறது.
 
இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விட பீச்சர்போனின் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. ஸ்மார்ட்போன்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது.  
 
இதன் மூலம் தற்போது இருப்பதை விட 20% அதிக வாடிக்கையாளர்கள் அதாவது கிட்டதட்ட 100 மில்லியன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிகிறது.
 
மேலும், இதனால் இந்திய டெலிகாம் சந்தையின் வருவாய் 7% வரை குறையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தக சுமையை குறைக்க வீட்டு பாடத்துக்கு தடை விதித்த மாநில அரசு