Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சஹஜ் சமாதி: பானுமதி நரசிம்மனின் தியான நுட்பம்!

சஹஜ் சமாதி: பானுமதி நரசிம்மனின் தியான நுட்பம்!
, திங்கள், 30 ஏப்ரல் 2018 (15:25 IST)
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சகோதரி பானுமதி நரசிம்மனிடம்   எளிமையான தியானத்தின் கலை கற்றுக் கொள்ளுங்கள். சுமார் ஒரு லட்சம் மக்கள் 300 வெவ்வேறு இடங்களில் தியானிக்க கற்றுக்கொள்ளவுள்ளனர். 
 
மே மாதம் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பானுமதி நரசிம்மனிடம் இருந்து சஹஜ் சமாதி தியானம் நுட்பத்தை கற்றுக் கொள்ள உள்ளனர். பானுமதி நரசிம்மன் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கரின் சகோதரி மற்றும் குருதேவ் புத்தகத்தின் எழுத்தாளர். 
 
3,000-க்கும் மேற்பட்ட வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆய்வுகள், இன்று தியான பலன்களின் பொது அறிவுகளாக மாறி வருகின்றன. வழக்கமாக சஹஜ் சமாதி நடைமுறைகளின் நன்மைகள் தெளிவான சிந்தனை, அதிகரித்த ஆற்றல், சிறந்த உடல் ஆரோக்கியம், மேம்பட்ட உறவுகள் மற்றும் மன அமைதி ஆகியவை அளிக்கும்.
 
கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற உலக உளவியலாளர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில், இதய ஆரோக்கியம், நரம்பு மண்டலம் மற்றும் மருத்துவ மன அழுத்தம் ஆகியவற்றில் சஹஜ் சமாதி தியானத்தின் ஆய்வு சிறந்த ஆராய்ச்சிக்கான விருதை பெற்றது.
 
சஹஜ் சமாதி நுட்பம் எளிதான மற்றும் எளிமையான தியான வழியை கற்பிக்கிறது. இதில் 14 வயதுக்கு மேலானவர்கள் தியானிக்க கற்றுக்கொள்ளலாம். தியானிப்பவர்கள் ஒரு எளிய ஒலி மனநிலையை பயன்படுத்த கற்று கொள்கின்றனர். இது மனதை அமைதியாக்குகிறது. 
 
இந்த தியானத்தின் மூலம் மன அழுத்தம் மறைந்து, முடிவெடுக்கும் திறன் வளர்ந்து முன்னேற்றம் மற்றும் மக்கள் வாழ்க்கையில்  தெளிவு பெருகிறார்கள். தியானம் முழுவதும் நம்மை உற்சாகமாக இருக்க உதவுகிறது. இது உங்கள் புன்னகையை நிலைக்க செய்கிறது என்கிறார் திருமதி. பானுமதி. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவமனையின் அலட்சியத்தால் கோமா நோயாளியின் கண்களை கடித்த எலி