Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கம்பீர், யுவராஜ் இல்லை: சிக்கிய பிசிசிஐ, வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

கம்பீர், யுவராஜ் இல்லை: சிக்கிய பிசிசிஐ, வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
, வெள்ளி, 19 அக்டோபர் 2018 (11:36 IST)
வரும் 23 ஆம் தேதி ஏ, பி, சி அணிகளுக்கு இடையிலான தியோதர் டிராபி போட்டி துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி வீரர்கலின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு சிக்கலில் சிக்கியுள்ளது. 
 
தியோதர் டிராபி போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வு செய்து அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடர், உலகக்கோப்பை போட்டிக்கு தயார்படுத்தும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது.
 
அதன்படி, இந்திய ஏ அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாகவும், பி அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யரும், சி அணிக்கு ரஹானே கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும், அணியில் அஸ்வின், ரஹானே, பிரித்வி ஷா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், யுவராஜ் சிங், கவுதம் கம்பீர் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 
 
இதனால், ஆத்திரமடைந்த நெட்டிசன்கள் பிசிசிஐயை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபில் தேவ் சாதனையை முறியடிப்பாரா ஜடேஜா?