Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சி எஸ் கே பவுலர்கள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்கின்றனர்… கேப்டன் ருத்துராஜ் ஆதங்கம்!

சி எஸ் கே பவுலர்கள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்கின்றனர்… கேப்டன் ருத்துராஜ் ஆதங்கம்!

vinoth

, சனி, 20 ஏப்ரல் 2024 (07:48 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி தோனி, ரஹானே மற்றும் ஜடேஜா ஆகியோரின் நிறப்பான ஆட்டத்தால் 176 ரன்களை சேர்த்தது.

இதன் பின்னர் ஆடிய லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகச்சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். டிகாக் 54 ரன்களும் கே எல் ராகுல் 82 ரன்களும் சேர்க்க, 19 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே எல் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது.

தோல்விக்குப் பின்னர் பேசிய சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் “இந்த பிட்ச்சில் பேட்டிங்கில் என்ன முடியுமோ அதை செய்தோம். ஆனாலும் நாங்கள் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம் என நினைக்கிறேன். பவர் ப்ளேக்கு பிறகு சிறப்பாக கொண்டு செல்லமுடியவில்லை.

சிஎஸ்கே பவுலர்கள் பவர்ப்ளே ஓவர்கள் விக்கெட்களை எடுக்காமல் சொதப்பி வருகின்றனர். அதில் முன்னேற்றம் காணவேண்டும். அதுதான் எதிரணியை அழுத்தத்தில் தள்ளும்.   அடுத்த போட்டி லக்னோவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடக்க உள்ளது. அதில் தவறுகளை சரி செய்வோம்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பீல்டிங் நிக்கும்போது என்ன கவனி… இல்லன்னா வெளிய போயிடு’ – இளம் வீரரிடம் கோபத்தைக் காட்டிய தோனி!