Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டோம்… டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் பண்ட் கருத்து!

தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டோம்… டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் பண்ட் கருத்து!

vinoth

, திங்கள், 1 ஏப்ரல் 2024 (07:40 IST)
சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று  விசாகப்பட்டணத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 191 ரன்கள் சேர்த்தது.

இதனை அடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடிய நிலையில் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்ததால் ரன்கள் குவிக்க திணறியது. கடைசி நேரத்தில் தோனி வந்து அதிரடியில் இறங்கினாலும் அந்த அணியால் 171 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் “பவுலர்கள் குறையே சொல்ல முடியாத விதத்தில் பந்துவீசினார்கள். நாங்கள் எங்கள் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டுள்ளோம்.  பிரித்வி ஷா கடந்த இரண்டு வாரங்களாக கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டார். அவருக்கு நாங்கள் வாய்ப்புகளை வழங்கவேண்டும் என முடிவு செய்தோம்.  முகேஷ் இதுபோலவே கடைசி ஓவர்களில் பந்துவீசினால் சிறப்பாக இருக்கும்.  நான் கடந்த ஒன்றரை வருடங்களாக அதிகமாக கிரிக்கெட் விளையாடவில்லை. நான் என்னுடைய 100 சதவீதத்தையும் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஎஸ்கே தோற்பது ஒரு மேட்டரே இல்லை.. கடைசி ஓவரில் தல தோனி ஜெயிச்சிட்டார்.. கொண்டாடும் ரசிகர்கள்..!