Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இவ்வளவு ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது இதுவே முதல் முறை... ரச்சின் ரவீந்தரா பூரிப்பு

இவ்வளவு ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது இதுவே முதல் முறை... ரச்சின் ரவீந்தரா பூரிப்பு

vinoth

, சனி, 23 மார்ச் 2024 (14:39 IST)
17 ஆவது ஐபில் சீசன்  நேற்று சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்  தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதனால் இந்த போட்டி ரசிகர்களால் பெரியளவில் கொண்டாட்டமாகப் பார்த்து ரசிக்கப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி முதலில் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்து 173 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் பேட் செய்த சி எஸ் கே அணியில் அனைத்து  வீரர்களும் அதிரடியாக விளையாடினர். இதனால் 19 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்து  எளிதாக இலக்கை எட்டியது.

இந்த போட்டியில் சென்னை அணிக்காக முதல் முறையாகக் களமிறங்கிய நியுசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்தரா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரவீந்தரா 15 பந்துகளில் 35 ரன்கள் விளாசி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். இதனால் சி எஸ்கே அணி இலக்கை எளிதாக துரத்தியது.

போட்டி முடிந்ததும் பேசிய ரவீந்தரா ‘நான் விளையாடியதிலேயே சேப்பாக்கம் மைதானம்தான் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்ட மைதானமாக உள்ளது. இவ்வளவு ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு இடையில் நான் விளையாடுவது இதுவே முதல் முறை.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“ கேப்டனாக இருப்பதில் எனக்கு எந்த பிரஷரும் இல்லை… ஏனென்றால்…” வெற்றிக்குப் பிறகு சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ்!