Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிராஜ், மேக்ஸ்வெல் அபார பந்துவீச்சு… பெங்களூர் அணிக்கு பஞ்சாப் நிர்ணயித்த இலக்கு!

சிராஜ், மேக்ஸ்வெல் அபார பந்துவீச்சு… பெங்களூர் அணிக்கு பஞ்சாப் நிர்ணயித்த இலக்கு!

vinoth

, திங்கள், 25 மார்ச் 2024 (21:16 IST)
17 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தற்போது ஆரம்ப கட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. இன்றைய போட்டியில் ஆர் சி பி மற்றும் பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி நிதான ஆட்டத்தை மேற்கொண்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காமல் விரைவிலேயே தங்கள் விக்கெட்டை இழந்தனர்.

இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் சேர்த்தது. பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். பெங்களூர் அணிக்கு இலக்காக 177 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அதைத் துரத்தி முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

RCB vs PBKS: டாஸ் வென்ற பெங்களூர் அணி எடுத்த முடிவு… வெற்றி யாருக்கு?