Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேப்பாக்கம் மைதானத்தில் கோலி ஒன்னும் பெருசா சாதிக்கல… முன்னாள் வீரர் சொன்ன புள்ளி விவரம்!

சேப்பாக்கம் மைதானத்தில் கோலி ஒன்னும் பெருசா சாதிக்கல… முன்னாள் வீரர் சொன்ன புள்ளி விவரம்!

vinoth

, திங்கள், 11 மார்ச் 2024 (10:31 IST)
இன்னும் 11 நாட்களில் ஐபிஎல் 2024 தொடங்க உள்ள நிலையில் அதற்காக 10 அணிகளும் தங்கள் வீரர்களை ஒருங்கிணைத்து தயாராகி வருகின்றனர். இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை நிறைவு செய்துள்ள நிலையில் இந்திய வீரர்களும் விரைவில் தங்கள் அணிகளோடு இணைய உள்ளனர்.

இந்த முறை முதல் போட்டி கடந்த முறை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் சி எஸ் கே அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடுகிறது.

இந்த போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் “சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை கோலி பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. அவர் 30 ரன்கள் சராசரி மட்டுமே வைத்துள்ளார். அதிலும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக 110 என்ற அளவிலேயே உள்ளது.” எனக் கூறியுள்ளார். கடந்த சீசனில் கோலி அசுர பார்மில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டாரா சூர்யகுமார்? அவரே அளித்த விளக்கம்!