Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய இந்திய வீரர்..!

ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய இந்திய வீரர்..!
, புதன், 30 ஆகஸ்ட் 2023 (07:47 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்கான அணியே பெரும்பாலும் உலகக் கோப்பைக்கான அணியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

காயம் காரணமாக அணியில் இருந்து கடந்த மே மாதம் முதல் விளையாடாத கே எல் ராகுல் குணமாகி, ஆசியக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்தார்.

ஆனால் இப்போது அவர் ஆசியக் கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார். உடல்நலத்தில் சிறு பிரச்சனைகள் எழுந்துள்ளதால் அவரால் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை: ஒரே நிமிடத்தில் முடங்கிய இணையதளம்..!