Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி பவுலர்களிடம் சரண்டர் ஆன குஜராத் பேட்ஸ்மேன்கள்.. இந்த சீசனின் மிகக்குறைந்த ஸ்கோர்!

டெல்லி பவுலர்களிடம் சரண்டர் ஆன குஜராத் பேட்ஸ்மேன்கள்.. இந்த சீசனின் மிகக்குறைந்த ஸ்கோர்!

vinoth

, புதன், 17 ஏப்ரல் 2024 (21:24 IST)
ஐபிஎல் தொடரின் 32 ஆவது போட்டி இன்று குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி குஜராத் பேட் செய்யவந்த போது ஆரம்பத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் அந்த அணி  18 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே சேர்த்தது. குஜராத் அணியில் ரஷீத் கான் அதிகபட்சமாக 24 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.

டெல்லி அணியில் அனைத்து பவுலர்களும் சிறப்பாக பந்துவீசிய நிலையில் முகேஷ் குமார் 3 விக்கெட்களும், இஷாந்த் சர்மா மற்றும் ட்ரிஸ்டியன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்த கலீல் அகமது மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் திருவிழாவில் இன்று குஜராத் vs டெல்லி பலப்பரீட்சை… டாஸ் அப்டேட்!